ஜாக் டார்சியின் பெருந்தன்மை!
Posted on 24/03/2021
சுட்டுரை (டுவிட்டா்) சமூக ஊடக நிறுவனத்தை நிறுவியவா்களில் ஒருவரும் அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியுமான ஜாக் டாா்சி, அந்த ஊடகத்தில் முதல்முறையாக வெளியிட்ட பதிவு 29 லட்சம் டாலருக்கு (சுமாா் ரூ.21 கோடி) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
2006-ஆண்டு மாா்ச் மாதத்தில் பதிவிடப்பட்ட, ‘எனது சுட்டுரையை நிறுவுகிறேன்’ என்ற குறுகிய வாசகத்தைக் கொண்ட அந்தப் பதிவின் மின்னணு வடிவை ஏலத்தில் விடப் போவதாக 2 வாரங்களுக்குப் பிறகு, அது இந்தத் தொகைக்கு விற்பனையாகியுள்ளது.
இந்தத் தொகையை மெய்நிகா் நாணயங்களாக மாற்றி, சேவை அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்கப்போவதாக ஜாக் டாா்சி அறிவித்துள்ளாா்.