சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் சைலண்ட் பிளான்!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் சைலண்ட் பிளான்!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி மேம்படுத்தப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனினை 2018-ம் ஆண்டில் வெளியிட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வெய்போவில் கிஸ்மோசைனா வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய Mi மகிஸ் 2 ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிற்கு முன் அறிமுகம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஸ்லாஷ்லீக்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் 100% பெசல் லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது.

ஸ்லாஷ்லீக்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா வலது புறத்தில் பொருத்தப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இதுதவிர ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் முழுமையாக காட்சியளிக்கிறது. பின்புறத்தில் முந்தைய Mi மிக்ஸ் போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. அந்த வதையில் புதிய மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனிலும் கைரேகை சென்சார் பின்புறம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற முக அங்கீகார வசதி வழங்கப்பட்டு, கைரேகை சென்சார் நீக்கப்பட்டு அல்லது முன்பக்கம் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்திய புகைப்படங்களில் இந்த தகவல்கள் மறுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் Mi 7 ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமியின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top