மெசேஜ்களை சிக்னல் பயன்பாட்டில் நீக்குவதும் முறை!
Posted on 15/03/2021
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய விதிகளைக் கட்டாயம் ஆக்கிய பின்னர், சிங்னல் மெசேஜ்ஜிங் ஆப் உலகம் முழுக்க பிரபலமடைந்தது. சிக்னல் என்பது பிரபலமான மெசேஜ்ஜிங் பயன்பாடாகும், இது உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்களால் இப்போது பயன்படுத்தப்படுகிறது.
இன்ஸ்டன்ட்-மெசேஜிங் பயன்பாடு பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் புகழ்பெற்ற மெசேஜிங் பயன்பாடான டெலிகிராமுடன் ஒத்திருக்கும் பல சேவைகள் மற்றும் நன்மைகளை இந்த ஆப்ஸ் வழங்குகிறது. பிற சமூக ஊடக தளங்களைப் போலவே, சிக்னல் அதன் பயனர்களை அதன் மேடையில் மெசேஜ்களை டெலீட் செய்யவும், அனுப்பிய மெசேஜ்களை அன்சென்ட் செய்யவும் அனுமதிக்கிறது.
இதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ்ஜை 3 மணி நேர காலத்திற்குள் பெறுநர் மற்றும் அனுப்புனர் ஆகிய இருவருக்கும் டெலீட் செய்துகொள்ளலாம். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, பயனர்கள் தங்கள் அனுப்பிய மெசேஜ்ஜை அனுப்புனர் பக்கத்தில் இருந்து மட்டுமே நீக்க முடியும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.