ஆக்சிஜன் உற்பத்திக்கு வேதாந்தா அனுமதி கோரி மனு!

ஆக்சிஜன் உற்பத்திக்கு வேதாந்தா அனுமதி கோரி மனு!

தற்போது கரோனா பரவல் அதிகரித்து வரும் இக்கட்டான இன்றைய சூழ்நிலையில் , மக்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம், நீதிமன்றம் அனுமதி வழங்கினால் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் உற்பத்தியை தயாரித்து எங்களால் இலவசமாக வழங்க முடியும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும் கடந்த 2018 முதல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போதைய கரோனா பேரிடர் சூழ்நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கான இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. விரைவில் இந்த வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top