முழுவீச்சில் தடுப்பூசிப் பணிகள்!

முழுவீச்சில் தடுப்பூசிப் பணிகள்!

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருப்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார். நாள்தோறும் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், வரும் காலங்களில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
 
நாமக்கல் மாவட்டத்தில் 120 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மூன்று நாள் நடைபெறும் முகாம்களில் நாளொன்று 5 ஆயிரம் பேர் விதம் 15 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 3 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
சிவகங்கையில் செஞ்சிலுவை சங்கம், காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், சோப் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top