ஏழு பேர் விடுதலை விவகாரம்!
Posted on 06/02/2021
கடந்த 5-ந் தேதி வெள்ளிக்கிழமை திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
அதிமுகவும் பாஜகவும் நகமும் சதையும் போல் கூட்டணியாக இருக்கின்றன. 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகிறாா்கள். பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு வாா்த்தையை முடித்து, தொகுதிப் பங்கீட்டை முதல்வா் பழனிசாமி அறிவிக்கும் முன்பு, ஒரு நிபந்தனையாக, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதல்வா் சென்றால் திமுக எம்.பி.-க்கள் உடன் வரத் தயாராக இருக்கிறாா்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.