பாலக்கோடு தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவு!

பாலக்கோடு தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவு!

ஏப்ரல் 6-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  இரவு 7 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததவும் வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அறை கதவுகள் மூடப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு இடங்களை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே  2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளது.  குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top