ஓட்டுக்குப் பணம் தருவதாக தேர்தல் கமிஷனிடம் புகார்!
Posted on 03/04/2021
தேர்தல் பிரசாரம் நாளை(ஏப்.,4) இரவு 7:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி சில இடங்களில் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க., வினர் ஓட்டுக்கு ரூ.2,000, தி.மு.க., வினர் ரூ.1,000 கொடுப்பதாக ம.நீ.ம., வேட்பாளர் முனியசாமி மேற்கு தேர்தல் பார்வையாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ராவிடம் புகார் மனு அளித்தார்.