ஓட்டுக்குப் பணம் தருவதாக தேர்தல் கமிஷனிடம் புகார்!

ஓட்டுக்குப் பணம் தருவதாக தேர்தல் கமிஷனிடம் புகார்!

தேர்தல் பிரசாரம் நாளை(ஏப்.,4) இரவு 7:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி சில இடங்களில் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க., வினர் ஓட்டுக்கு ரூ.2,000, தி.மு.க., வினர் ரூ.1,000 கொடுப்பதாக ம.நீ.ம., வேட்பாளர் முனியசாமி மேற்கு தேர்தல் பார்வையாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ராவிடம் புகார் மனு அளித்தார்.

அவர் கூறுகையில், ''ஜெய்ஹிந்த்புரம், முத்துப்பட்டி, சொக்கலிங்கநகர் பகுதியில் இரு கட்சியினரும் வெளிப்படையாக பணம் பட்டுவாடா செய்கின்றனர். பிரசாரத்தின் போது வேண்டுமென்றே மின்சாரத்தை துண்டித்து இடையூறு செய்கின்றனர். ஆதாரத்துடன் புகார் மனு அளித்து உள்ளேன்'' என்றார்.இதேபோல் மதுரை தெற்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், சோழவந்தான் தொகுதிகளில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் விசாரித்து வருகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top