நாகையில் முழு வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு
Posted on 04/03/2021
நாகபட்டினத்தில் மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களைச் சந்தித்து, விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார் ஆட்சியர்.
அதன்படி, தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், மீன்வளக்கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை காலை நாகையில் படகில் பயணித்தனர்.
அவர்கள், நாகை புதிய கடற்கரையிலிருந்து 5 படகுகளில் விழிப்புணர்வு பதாகைகளுடன் பயணித்து, நாகை துறைமுகத்தில் கரையேறினர்.
அங்கு மீன் விற்பனை மற்றும் கொள்முதலில் பங்கேற்றிருந்த மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களைச் சந்தித்து, விழிப்புணர்வு பிரச்சார கையேடுகளை வழங்கி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களும், மாணவர்களும் வலியுறுத்தினர்.