மாணவர்களை ஒன்று திரட்டிய ஜல்லிக்கட்டு!

மாணவர்களை ஒன்று திரட்டிய ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

சென்னை, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக வகுப்புக்களை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக சட்ட, பொறியியல், மருத்துவ கல்லூரிகள் மாணவர்களும் வகுப்புக்களை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

சென்னை, மறைமலைஅடிகள் நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து மனிதசங்கிலி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள இளைஞர்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாகவும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கரூர், கடலூர், திருவாரூர், திருவள்ளூர், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top