ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மும்பையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!
Posted on 21/01/2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது. இளைஞர்கள், பொது மக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு வெளி மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது.
குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று காந்தி சிலை அருகே ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடந்த நிலையில், இன்று மும்பையில் போராட்டம் நடந்தது. அங்கு வசிக்கும் தமிழர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய அவர்கள், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனக்கூறினர். பீட்டா அமைப்புக்கு எதிரான பதாகைகளுடன் வந்த அவர்கள் அந்த அமைப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக டில்லியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
Tags: News, Madurai News, Lifestyle, Art and Culture