தீவிர மருத்துவ கண்காணிப்பில் சோனியா காந்தி!

தீவிர மருத்துவ கண்காணிப்பில் சோனியா காந்தி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்து வந்தார். அதன் பின்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சோனியா காந்திக்கு குறைந்த சுவாசக் குழாய் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மருத்துவரின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் சோனியா காந்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி கொரோனா தொற்று ஏற்பட்டதால் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
 
அப்போது அவரது சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும், கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வரும் அவர், தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top