இந்து கோயிலுக்கு நிலம்தானமாய் வழங்கிய இஸ்லாமியர்!
Posted on 12/12/2020
பெங்களூருவின் புறநகர் பகுதியான வலகேரபுரா பகுதியில் நெடுஞ்சாலை அருகே அனுமன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வேண்டிக்கொண்டால் பக்தர்களது நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால், அந்தப் பகுதியில் உள்ள பலருக்கு இது மிகவும் விருப்பமான கோயிலாக இருந்தது.
இந்த அனுமன் கோவில் மிகவும் சிறியதாக இருந்ததாலும், பக்தர்கள் வந்து செல்வதற்கு சிரமம் ஏற்பட்டதாலும் விரிவாக்கம் செய்ய கோயில் நிர்வாகம் திட்டமிட்டதாக தெரிகிறது.
இதையறிந்த அப்பகுதியில் வசித்து வந்த எஹ்.எம்.ஜி.பாஷா எனும் முஸ்லிம், கோயில் அருகே இருந்த தனது 1,600 சதுர அடி நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் இந்த நிலத்தின் மதிப்பு 80 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.