மெர்சலில் அடம்பிடித்த விஜய்!

மெர்சலில் அடம்பிடித்த விஜய்!

மெர்சல் படத்தில் வரும் மேஜிக் காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி விஜய்யே மேஜிக் செய்தாராம். அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி ஸ்பெஷலாக நாளை ரிலீஸாகிறது. படம் பல தடைகளை தாண்டி ரிலீஸாக உள்ளது. பட ரிலீஸ் தொடர்பாக விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் விஜய் மேஜிக் கலைஞராக வருகிறார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவர் இரண்டு மேஜிக் கலைஞர்களிடம் பயிற்சி எடுத்துள்ளார். மெர்சல் படத்தில் 16 மேஜிக் காட்சிகள் உள்ளதாம். அந்த காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி விஜய்யே மேஜிக் செய்து அசத்தியுள்ளாராம்.

சண்டை காட்சிகளில் ரிஸ்கான காட்சிகளில் கூட டூப் வேண்டாம் நான் தான் நடிப்பேன் அப்பொழுது தான் ஒரிஜினலாக இருக்கும் என்று அடம்பிடிப்பவர் விஜய். சமூக வலைதளங்கள் பக்கம் சென்றால் திரும்பும் பக்கம் எல்லாம் மெர்சல் கொண்டாட்டமாக உள்ளது. படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top