மதுரை மாணவி சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை!
Posted on 07/06/2017
மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் மதுரை மாணவி பிருந்தா வயது 17, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். விளாங்குடி ராயல் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் இவர், கராத்தே மாஸ்டர் நாகச்சந்திரனிடம் 9ம் வகுப்பு முதல் பயிற்சி பெற்று வருகிறார். மாவட்ட, மாநில போட்டிகளில் வெற்றிகளை பெற்றுள்ளார். தந்தை துரைப்பாண்டி, ஆட்டோ ஓட்டுகிறார்.
வறுமையான சூழ்நிலையிலும் தன்னுடைய சொந்த செலவில் மகளின் கராத்தே சாம்பியன் கனவை நனவாக்கும் வகையில் மலேசியாவில் நடந்த 18-வது மிலோ இன்டர்நேஷனல் கராத்தே போட்டிக்கு அனுப்பி வைத்தார். போட்டியில் தங்க பதக்கம் வென்று தந்தையின் கனவை நிறைவேற்றி உள்ளார்.
இந்த சாதனையாளருக்கு தமிழக அரசின் உதவியும் கிடைக்கப்பெறுமாயின் இவர் சர்வதேச அளவில் ஜொலிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
Tags: News, Madurai News