அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி
Posted on 12/03/2021
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் முன் இன்று பேசும்பொழுது, கடந்த ஓராண்டுக்கு முன் நாம் ஒரு வைரசால் பாதிக்கப்பட்டோம். அமைதியாக, கவனிக்கப்படாமல் அது பரவியது. பல நாட்களாக, வாரங்களாக பின்னர் மாதங்களாக அது இல்லை என கூறி கொண்டே இருந்ததில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
இருளில் வெளிச்சம் தேடுவது என்று அமெரிக்கர்கள் பலரும் செய்து வருகிறோம். அமெரிக்காவில் உள்ள வயதுக்கு வந்த அனைவருக்கும் வருகிற மே 1ந்தேதிக்கு முன் கொரோனோ தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும்.
அமெரிக்காவில் இதுவரை மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 27 ஆயிரத்து 726 ஆக உள்ளது. இந்த எண்ணிகை, முதல் உலக போர், இரண்டாம் உலக போர், வியட்னாம் போர் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக்கையை விட மிக அதிகம் என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.