சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குள்ளானது பிலிப்பைன்ஸ்!
Posted on 16/12/2020
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் மையம் மைண்டானாவோ நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ அல்லது பொருள்சேதமோ இதுவரை எதுவும் பதிவாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் அவ்வபோது தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.