ஜெய் - அஞ்சலி காதலை உறுதிப்படுத்திய தோசை!
Posted on 08/02/2017
ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் இயக்குனர் பிரம்மா இயக்கிய 'மகளிர் மட்டும்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இந்த டீசரில் நாயகி தனது வாழ்நாளில் தான் எவ்வளவு தோசை தனது குடும்பத்திற்காக செய்து கொடுத்த கணக்கு ஒன்றின் காட்சி வரும்.
இந்த காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்ட நிலையில் தற்போது சூர்யா-ஜோதிகா தம்பதியினர் 'தோசை சாலஞ்ச்' ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளனர். அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் மனைவிக்கு தோசை செய்து தர வேண்டும் என்பதுதான் இந்த சாலஞ்சின் கான்செப்ட். முதலில் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுக்கு தோசை சுட்டு கொடுத்த புகைப்படம் வெளிவந்தது.
அதேபோல் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு உள்பட பல கோலிவுட் நட்சத்திரங்கள் தங்களுடைய மனைவிக்கு தோசை செய்து கொடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்பட்டு வரும் நிலையில் நடிகர் ஜெய், நடிகை அஞ்சலிக்கு தோசை செய்து கொடுத்த புகைப்படம் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இந்த புகைப்படம் தோசை கான்செட்ப் படி அவர்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags: News, Madurai News