சீன ராக்கெட் பூமியை நோக்கி வருகிறது!
Posted on 08/05/2021
சீன விண்வெளி நிலைய கட்டுமான கலத்தை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்தி விட்டு, பின்பு மீணடும் பூமிக்கு திரும்புவதற்கான வேலைகளில் லாங் மார்ச் 5பி எனும் ராக்கெட் ஈடுபட்டது. அந்த சமயம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது.
அதாவது சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் என்பவர், செய்தியாளர்களிடம் கூறியது என்னவென்றால், கட்டுப்பாட்டை இழந்துள்ள அந்த ராக்கெட் ஆனது பூமியின் புவி வட்ட பாதைக்குள் நுழையும்போது, அதனுடைய பெரும்பாலான பகுதி தானாகவே எரிந்து விடும் என்று கூறியுள்ளார்.