மக்களை குழப்பும் பி.எஸ் 4!

மக்களை குழப்பும் பி.எஸ் 4!

மோட்டார் வாகனங்களின் மூலமாக வெளியேற்றப்படும் நச்சுப்புகை மனிதர்களுக்கு மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனை முற்றிலுமாக குறைத்திடும் நல்லெண்ணத்தில் வாகனங்களுக்கான பி.எஸ் 4 தொழிற்நுட்பம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் சேர்க்கப்படாத வாகனங்கள்யாவும் சந்தையில் ஒரு குறிப்பிட்ட தேதியில் வாடிக்கையாளர்களுக்கு விற்கக் கூடாதென அரசு உத்தரவிட்டது. அதன் காரணமாக ஒரே இரவில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மிகப்பெரிய விலை குறைப்புடன் விற்கப்பட்டது அனைவரும் அறிந்ததாகும். மாசுக்கட்டுப்பாட்டுப்பயன் என்பது முதன்மைப்படுத்தப்பட்டாலும், ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் வாகனங்கள் விற்கப்பட வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்ட வினோதம் நிறைந்த முன்னேற்பாடாகவே இது தோன்றுகிறது.

மேலும், தற்போது பி.எஸ் 4 (பாரத் ஸ்டேஜ் 4) தொழிற்நுட்பத்துடன் வரும் வாகனங்களில் முகப்பு விளக்கை அனைக்கும் ஒரு அம்சம் நீக்கப்பட்டு எப்பொழுதும் எரியும்வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், முகப்பு விளக்குடன் வண்டியை ஸ்டார்ட் செய்வது தவறான வழிமுறையாக அறிவுறுத்தப்பட்டது. இது பொரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அறிவார்த்தமான செயலாக தோன்றவில்லை.

இதனால் வாகனத்தில் பயணிக்கும் போதெல்லாம் எதிர்வருவோர் விளக்கு அணைக்க சொல்ல சிக்னல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். குளிரும் பனியும் நிறைந்திருக்கும் குளிர் பிரதேசங்களில் விளக்குடனான பயணம் நியாயமானதாக இருக்கும். அதேசமயம் நம் ஊரில் எப்போதும் விளக்குடன் பயணம் செய்வது கேலிக்கூத்தாக தோன்றும். இந்த முறை எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் மாசு கட்டுப்பாட்டிற்கும் முகப்பு விளக்கிற்கும் என்ன சம்பந்தம் உண்டு என்பதும் ஆயிரம் டாலர் கேள்வியாகும். புகை கக்கும் அரசு பேருந்துகளும் மற்றும் இதர வாகனங்களையும் தடை விதிக்குமா?

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top