ஆதித்யா வர்மா பட நாயகிக்கு கொரோனா தொற்று
Posted on 06/01/2021
நடிகர் துருவ் விக்ரம் அறிமுகமான 'ஆதித்யா வர்மா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பனிதா சாந்துவிற்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கிரிசைய்யா இயக்கத்தில் மூத்த நடிகர் விக்ரம் அவர்களின் வாரிசு துருவ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமான திரைப்படம் 'ஆதித்யா வர்மா'. இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக். இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பொலிவுட் நடிகை பனிதா சாந்து. 'ஆதித்ய வர்மா' படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் வேற்று மொழி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். அந்த வகையில் 'கவிதா & தெரசா' என்ற வங்காள படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்றுவதற்காக லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு வந்த இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் போது அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நடிகை பனிதா சாந்துவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவருடைய ரசிகர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.