ஜாகுவார் கார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!
Posted on 18/02/2021
2025-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து கார்களும் எலக்ட்ரிக் கார்களாக இருக்கும் என ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் பிராண்டுகளில் பல எலக்ட்ரிக் கார் மொடல்கள் 2030-ஆம் ஆண்டுக்குள் வரிசையாக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜாகுவார் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்திற்காக ஆண்டுக்கு சுமார் 2.5 பில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தியரி பொல்லோரே கூறியுள்ளார்.