கோப்பையை கைப்பற்றும் திட்டத்துடன் சூப்பர் சிஎஸ்கே களம் காண்கிறது!
Posted on 25/03/2021
இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் திட்டத்துடன் சிஎஸ்கே களத்தில் இறங்கியுள்ளது. அனைத்து அணிகளுக்கும் முன்னதாகவும் தங்களது பயிற்சி போட்டிகளை துவக்கியுள்ள சிஎஸ்கே, தற்போது ஜெர்சியையும் சரியான நேரத்தில் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவடையவுள்ளது. இதையொட்டி அனைத்து அணிகளும் ஏறக்குறைய தங்களது பயிற்சி போட்டிகளை துவங்கியுள்ளன, அல்லது அறிவித்துள்ளன. தொடர் குறித்த அறிவிப்புக்கு முன்னதாகவே சிஎஸ்கே தனது பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த பயிற்சி முகாம்கள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வந்தன. இந்த முகாமில் கேப்டன் எம்எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு மற்றும் அணியின் புதிதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.