கால்பந்து வீரர் ரொனால்டோவின் குழந்தை திடீர் மரணம்
Posted on 20/04/2022
உலகின் மிக சிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குழந்தையின் தீடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கும், ஸ்பானிஷ் மாடலான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும், ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
சமீபத்தில் ரொனால்டோவின் மனைவி மீண்டும் கர்ப்பமாக இருந்த போது இரட்டை குழந்தைகளை எதிர்ப்பார்பதாக சமூக வலைதளத்தில் கூறியிருந்தனர். அவர்கள் எதிர்ப்பார்த்தபடி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையுடன் இரட்டை குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தங்களின் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துவிட்டதாக ரொனால்டோ அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரொனால்டோ தனது டிவிட்டரில், எதிர்பாராத விதமாக தங்களின் ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவும், பெண் குழந்தை நலமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வலி தாங்க முடியாத இழப்பாக இருந்தாலும் தங்களின் மற்ற குழந்தைகள் ஆறுதலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தங்களின் குழந்தைக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த இழப்பிலிருந்து தாங்கள் வெளியில் வருவதற்கு தனிமையை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ரெனால்டோ ஆரம்ப காலங்களில் விளையாடிக் கொண்டிருந்த ரியல் மாட்ரிட் நிறுவனம் இரங்கல் தெரிவித்தள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எங்கள் அன்பான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் எதிர்பார்த்த குழந்தைகளில் ஒருவரின் மரணத்திற்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், சோகத்தில் இணைவதாகவும் பதிவிட்டுள்ளது.
Tags: News