இந்திய அணித்தலைவி மித்தாலி கடும் முயற்சி வீணானது!

இந்திய அணித்தலைவி மித்தாலி கடும் முயற்சி வீணானது!

சம்பிரதாயமான 5வது மற்றும் கடைசி ஒருநாள் மகளிருக்கான போட்டி லக்னோவில்   நேற்று நடந்தது.

டாஸ் வென்ற தெ.ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முன்னணி வீராங்கனைகள்  பிரியா புனியா 18, மந்தானா 18, பூனம் ராவுத் 10ரன்னில்  ஆட்டமிழக்க, இந்தியா 12.1 ஓவரில் 53 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.
 
இந்த நிலையில், ஹர்மன்பிரீத் - கேப்டன் மித்தாலி ராஜ் இணை 4வது விக்கெட்டுக்கு 71* ரன் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டது.  துரதிர்ஷ்டவசமாக ஹர்மன்பிரீத்  31வதுஓவர் முடிவில் காயம் காரணமாக  ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அவர் 30ரன்  எடுத்திருந்தார்.  ஒரு முனையில் மித்தாலி உறுதியுடன் போராட, சக வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர் (2 பேர்  டக் அவுட்). இதனால் இந்தியா 49.3ஓவரில் 188 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மித்தாலி ராஜ் 79 ரன்னுடன் (104 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்)  ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியும் 10.2 ஓவரில் 27 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும்,  மிக்னன் டு பிரீஸ் 57 ரன் (100 பந்து, 4 பவுண்டரி), போஷ் 58 ரன் (70 பந்து, 8 பவுண்டரி) விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top