நடிக்க கூடாது என்ற மனநிலையை மாற்றிய கதை - ப்ரியா!
Posted on 18/07/2017
வாமனன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ப்ரியா ஆனந்த தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவில் இவருக்கான வாய்ப்பு குறைந்தது. தற்போது ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் அவர் கூறியதாவது:-
இந்த படத்தின் கதையை கேட்கும் முன் இனி எந்த படத்திலும் நடிக்க கூடாது என்ற மனநிலையில் இருந்தேன். கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்ற ஆர்வம் வந்தது. படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை என்றதும் எனக்கு நல்ல காதல் பாடல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தற்போது எதிர்பார்த்ததை விட மிகசிறந்த பாடல்கள் கிடைத்துள்ளது என்றார்.
Tags: News, Hero, Star