தனி விமானத்தில் மும்பைக்கு வருகிறது ஸ்ரீதேவியின் உடல்
Posted on 26/02/2018
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் துபாயில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது. இறப்பு சான்றிதழ் மாலை மருத்துவமனையில் இருந்து பெறப்படும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் போனிகபூர் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா கொண்டு வரப்படுகிறது என கூறினார். இதற்காக அம்பானியின் தனி விமானம் துபாய்க்கு சென்றுள்ளது.
அவரது உடல் இன்று மும்பைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அவரது இறுதி சடங்கு நடைபெறலாம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: News, Hero, Star