2 வீரர்களை வெளிப்படையாக அறிமுகம் செய்த தோனி?

2 வீரர்களை வெளிப்படையாக அறிமுகம் செய்த தோனி?

தீபக் சஹாருக்கு மாற்று வீரர் இவர்கள்தான் என தோனி வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி துவங்கவுள்ளது. இதில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் காண உள்ளது.
 
இந்நிலையில், சிஎஸ்கே முதல் அணியாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே பயிற்சியை துவங்கியிருந்தது. வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தோனி கடந்த இரண்டு சீசன்களில் ரன்களை குவிக்காமல் பார்ம் அவுட்டில் இருந்த நிலையில், 15ஆவது சீசனில் அபாரமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில், தோனி புல் பார்மில் தயாராக இருப்பதை வெளிப்படுத்தும் வகையல், பயிற்சியில்போது தோனி அடித்த சிக்ஸர்களை வீடியோவாக பதிவுசெய்து சிஎஸ்கே தற்போது வெளியிட்டுள்ளது.
 
மேலும், புது XI அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் தோனி இருக்கிறார். இதற்காக பயிற்சின்போது வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறார். இந்நிலையில், தீபக் சஹாரின் காயம் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி வருகிறது. இதனால், இவருக்கான தரமான மாற்று வீரரை தேர்வு செய்யும் பணியிலும் தோனி ஈடுபட்டு வருகிறார்.
 
இந்நிலையில், அந்த மாற்று வீரர்கள் லிஸ்டில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஷிவம் துபே ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தோனி, ராஜ்வர்தன், ஷிவம் துபே, உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் உரையாடியிருக்கிறார்கள்.
 
அப்போது முதலில் பேசிய ஸ்ரீனிவாசன், “சிஎஸ்கேவுக்கு புதிதாக வருகை தந்துள்ள ராஜ்வர்தன், ஷிவம் துபே இருவரையும் அன்புடன் வரவேற்கிறேன். சிஎஸ்கே இம்முறை கோப்பை வெல்லும், தோனி மீது நம்பிக்கை இருக்கிறது” என பேசி, 5 நிமிடத்தில் தனது உரையை முடித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய தோனி, “சூரத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பே பயிற்சியை தொடங்கியது நல்லதுக்குத்தான். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடிந்தது. அனைவரும் சிறப்பாக பயிற்சி பெற்று வருவது, நம்பிக்கையளிக்க கூடியதாக இருக்கிறது” எனக் கூறினார்.
 
இதனைத் தொடர்ந்து பேசிய ஆல்-ரவுண்டர் ராஜ்வர்தன், ‘‘சிஎஸ்கே என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி. அணியின் வெற்றிக்காக கடுமையாக முயற்சி செய்வேன். முழு உழைப்பையும் போட்டு சிஎஸ்கே அணிக்கு பெருமை சேர்ப்பேன். என்னால், நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும்” எனப் பேசியிருக்கிறார். அடுத்துப் பேசிய ஷிவம் துபேவும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார்.
 
தீபக் சஹார் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்பதால், மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி ஷிவம் துபே, ராஜ்வர்தனே தேர்வு செய்திருப்பதால், அவர்களின் மன உறுதியை அதிகப்படுத்தவே இருவரையும் உரிமையாளருடன் உரையாட வைத்திருக்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top