கொரோனாவை எதிர்கொள்ளலுக்கு விராட் கோலி தம்பதி 2 கோடி நன்கொடை!
Posted on 08/05/2021
இந்தியாவில் கொரோனா 2-வது அலை உக்கிரமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. 2-வது அலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது.
இந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி- பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. மேலும், ‘Ketto’ நன்கொடை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 7 கோடி ரூபாய் நன்கொடை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. நன்கொலை அளிக்குமாறு கேட்டுக்கொண்ட கோலி 2 கோடி ரூபாயும் வழங்கியுள்ளார்.