சீனியர் துவக்க வீரர் ஷிகர் தவானுக்கு தடுப்பூசி!
Posted on 07/05/2021
‘சீனியர் துவக்க வீரர் ஷிகர் தவான் 35, தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடிய இவர், இந்திய கிரிக்கெட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் வீரர் ஆனார். இதற்கு முன் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்ட போது, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
ஷிகர் தவான் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘அர்ப்பணிப்பு, தியாக உணர்வுடன் போராடி வரும் கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வது மட்டும் போதாது. தயவு செய்து முடிந்தவரை அனைவரும் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். கொரோனாவை வீழ்த்த இது ஒன்றுதான் உதவியாக இருக்கும்,’ என தெரிவித்துள்ளார்.