மது குடிக்க மட்டுமல்ல, பெட்ரோல் போடவும் புதுச்சேரி வருகிறார்கள்: கவர்னர் தமிழிசை
Posted on 30/04/2022
முன்பெல்லாம் புதுச்சேரிக்கு மதுகுடிக்க மட்டுமே நிறைய பேர் வருவார்கள், ஆனால் தற்போது பெட்ரோல் போட வருகிறார்கள் என்றும் அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை புதுவையில் குறைவாக உள்ளது என்றும் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் பேசியுள்ளார்.
புதுவை புதிய துறைமுகம் வளாகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் சுகாதார திருவிழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியபோது, ‘முன்பெல்லாம் புதுவைக்கு வருபவர்கள் மதுகுடிக்க தான் வருவார்கள் என்று கூறுவது உண்டு. ஆனால் இப்போது புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருப்பதால் பெட்ரோல் போடவே நிறைய பேர் வருகின்றனர். அந்த அளவிற்கு புதுச்சேரியில் விலை குறைவாக இருக்கிறது என்று அவர் பெருமையாக பேசி உள்ளார்.
புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.65 எனவும், டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 93.02 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 110.94 எனவும் டீசல் விலை ரூ.110.85 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News