திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி!
Posted on 29/01/2021
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை, மத்திய அரசு அறிவித்துஇருந்தது. அதன்படி, கடந்தாண்டு, மார்ச் இறுதியில் தியேட்டர்கள் மூடப்பட்டன. பின், படிப்படியாக இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. கடந்தாண்டு, அக்., 15ல் இருந்து, 50 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இருப்பினும் போதிய வருவாய் இல்லாததால், தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பிப்., 1 முதல், 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் பார்வையாளர்களை அனுமதிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துஉள்ளது. இதற்கு திரையுலகினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 'முக்கியமான கட்டத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு' என, அவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.