அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதி குற்றவழக்குப் பதிவு!
Posted on 20/03/2021
டாலர் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளின் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பார்சல் மூலமாக பல நூறு கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய சொப்னா மற்றும் அவருடைய கும்பலுக்கு, டாலர் கடத்திய வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்கிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் சொப்னாவின் ஆடியோ ஒன்று வெளியானது.