அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதி குற்றவழக்குப் பதிவு!

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதி குற்றவழக்குப் பதிவு!

டாலர் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளின் மீது  கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள  ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பார்சல் மூலமாக பல நூறு கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட வழக்கில்  தொடர்புடைய சொப்னா மற்றும் அவருடைய கும்பலுக்கு, டாலர் கடத்திய வழக்கிலும் தொடர்பு இருப்பது  தெரியவந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்கிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் சொப்னாவின் ஆடியோ ஒன்று வெளியானது.

அதில். ‘டாலர் கடத்திய வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் தொடர்பு உண்டு என கூற வேண்டும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் என்னை கட்டாயப்படுத்தினர்,’ என அவர் கூறியிருந்தார். இது, கேரளாவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘டாலர் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சிக்க வைப்பதற்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்,’ என  கூறி, அந்த அதிகாரிகளின் மீது கேரள குற்றப்பிரிவு  போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். 

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top