மேலும் நான்கு தமிழக நகரங்களில் விமான நிலையங்கள்!
Posted on 03/02/2021
தஞ்சை, நெய்வேலி, வேலூர், ராமநாதபுரத்தில் விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு நீதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் கேட்ட கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி பதில் தெரிவித்தார். தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
தஞ்சை விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தஞ்சை-புதுக்கோட்டை ரோட்டில் உள்ள விமானப்படை தளத்தின் அருகே விமான நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ராமநாதபுரத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் வரத் தொடங்கியிருக்கின்றனர். எனவே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ராமநாதபுரத்திலும் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
நெய்வேலியில் தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் கூறினார். வேலூரில் சிறிய ரக விமானம் இறங்கும் வகையில் ஓடுபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது.