அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரியில் நேர்முக வளாகத்தேர்வு 22 பேர் தேர்வு!
Posted on 07/09/2016
அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரியில் நடைபெற்ற வளாகத்தேர்வில் சென்னை அப்பலோ மருத்துவமனை குழுமம் மற்றும் டான்மெட் பார்மா இந்தியா, பிரைவேட் லிமிடெட், எஸ்.கே.என் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பங்கு பெற்றன.
நேர்முக வளாகத்தேர்வினை கலசலிங்கம் குழுமம் இயக்குனர் முனைவர் எஸ். சசி ஆனந்த் வாழ்த்துக்களுடன் கல்லூரி முதல்வர் முனைவர் என்.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். முதல் நாள் 23 மாணவர்கள் பங்கு கொண்டு 22 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இரண்டாம் நாள் 38 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நேர்முக வளாகத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் என்.வெங்கடேசன், முனைவர் ஜி. வினோதபூஷன் ஆகியோர் பணி ஆணையை வழங்கினர். நேர்முக வளாகத் தேர்வுக்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர்கள் ஜே. அன்புராஜ் மற்றும் வி.சிவக்குமார் செய்திருந்தனர்.
Tags: News, Madurai News, Education