பலரின் உயிரை குடித்த ப்ளூவேல் அட்மின் 17 வயது சிறுமியா?

பலரின் உயிரை குடித்த ப்ளூவேல் அட்மின் 17 வயது சிறுமியா?

ப்ளூவேல் கேம் விளையாட்டின் இறுதி கட்ட டாஸ்க்கான தற்கொலையில் இருந்து தப்பிக்கவே டாஸ்க் அட்மினாக மாறி மற்றவர்களின் உயிருடன் விளையாடியுள்ளார் 17 வயது சிறுமி. ஆன்லைனில் விளையாடப்படும் ப்ளூவேல் சவால் விளையாட்டானது குலை நடுங்க வைக்கும் 50 டாஸ்க்களை ஆன்லைனில் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் கேமில் வெற்றி பெற முடியும் என்று மாணவர்கள், சிறுவர்கள் மூளை சலவை செய்யப்பட்டு விளையாடப்படுகிறார்கள். இந்த விளையாட்டை ரஷ்யாவை சேர்ந்த ஃபிலிப் புடேகின் என்பவர் உருவாக்கினார். இவர் ரஷ்யாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டை உருவாக்கியவர் கைது செய்யப்பட்டபோதிலும் இந்த விளையாட்டு தொடர்ந்து விளையாடப்பட்டு பலரின் உயிரை குடித்து வருகிறது. இதுபோல் ரஷ்யாவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் ப்ளூவேல் விளையாட்டை விளையாடத் தொடங்கினார்.

அட்மின் கொடுத்த 49 டாஸ்க்களையும் செய்து முடித்த அந்த சிறுமிக்கு கடைசி டாஸ்க்கான தற்கொலை செய்து கொள்வது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் உஷாரான அவர், தான் தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை என்றும் எனவே இந்த விளையாட்டின் அட்மினாக செயல்பட்டு இந்த நிகழ்ச்சியை முடித்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த 17 வயது சிறுமி அட்மின் என்றதோடு மரணக் குழு நிர்வாகி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பல்வேறு குழுக்களை உருவாக்கி ப்ளூவேல் சவால்கள் மூலம் பலரை ஈர்த்துள்ளார். 50 வகையான டாஸ்க்களையும் விளையாடும் குழுக்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

இவ்வாறு உளவியலை கெடுக்கும் அளவுக்கு டாஸ்க்குகளை உருவாக்குவதுதான் இவரது பணி. இவரது கட்டளையின்படி யாராவது விளையாட மறுப்பு தெரிவித்தால் பெற்றோரையோ அல்லது உறவினர்களையோ கொன்று விடுவோம் என்று மிரட்டுவார். இதற்கு பயந்து எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

தனது உயிரை பாதுகாத்து கொள்ள மிகவும் தந்திரமாக அட்மினாக செயல்பட்டு மற்றவர்களின் உயிருக்கு உலை வைத்த இந்த சிறுமியை என்னவென்று சொல்வது. மிகவும் கொடூர எண்ணத்துடன் கிரிமினல் எண்ணத்துடன் இவர் செய்த செயல்களால் எத்தனை பெற்றோர் இன்று பிள்ளைகளை இழந்து தவித்து வருகின்றனர் என்பதும் பிள்ளை பெற எத்தனை கஷ்டங்கள் பட வேண்டியது என்பதை தெரிந்து கொள்ளவும் இது அறியாத வயது. இந்த சிறுமிக்கு போலீஸார் உளவியல் ரீதியிலான கவுன்சலிங் கொடுக்க வேண்டும்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top