அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்த இளைஞர் குத்திக்கொலை!

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்த இளைஞர் குத்திக்கொலை!

மேற்கு ஆஸ்திரேலியாவின் Yongah Hill குடிவரவு தடுப்பு முகாமிலிருந்த இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது. சம்பவத்தில் துருக்கிய பின்னணி கொண்ட 32 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் துருக்கிக்கு நாடு கடத்தப்படும் நோக்கில், கடந்த 3 ஆண்டுகளாக பெர்த்திற்கு அருகிலுள்ள இத்தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு குறித்த தடுப்புமுகாமிலிருந்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட மோதலின்போதே இவ்விளைஞர் கத்திக்குத்துக்கு இலக்கானதாக குறிப்பிடப்படுகிறது.
 
அதேசமயம் தடுப்புமுகாமிலுள்ள பெரும்பாலானவர்களின் விசாக்கள் குடிவரவுச்சட்டம் பிரிவு 501-இன் கீழ் நடத்தை(Character) அடிப்படையில் ரத்துசெய்யப்பட்டு நாடுகடத்தப்படும் நோக்கில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் ஆஸ்திரேலிய நீதி அமைப்பின் கீழ், குற்றம் இழைத்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்த பின் விடுவிக்கப்படுவதாகவும், ஆனால் குடிவரவு தடுப்புமுகாமைப் பொறுத்தவரை அதற்கு வழியில்லை எனவும், காலவரையறையின்றி தடுத்துவைக்கப்படும் பலர் தற்கொலை, கொலை போன்றவற்றினால் தமது உயிர்களைக்கூட இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் Refugee Action Coalition-இன் Ian Rintoul தெரிவித்தார்.
 
எனவே ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களில் இடம்பெறும் தற்கொலைச் சம்பவங்கள், தற்கொலை முயற்சிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top