பிரான்ஸ் அதிபருக்குக் கொரோனா தொற்று!
Posted on 18/12/2020
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரனுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரெஞ்சு குடியரசின் அதிபருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவருக்கு கோவிட்-19 அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று கண்டறியப்பட்டது” என்று தெரிவித்துள்ளது. பிரான்ஸ் விதிமுறைகளின்படி, அதிபர் மெக்ரன் ஏழு நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார்.