சாம்சங் நிறுவனத்தின் இரு புதிய கேலக்ஸி மாடல்கள்!
Posted on 03/04/2021
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி இரு மாடல்களும் வாட்டர்-டிராப் ரக நாட்ச் கொண்டிருக்கிறது. இத்துடன் கேலக்ஸி எப்1 இரு ஸ்மார்ட்போன்களில் உயர்ந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகின்றது.
ப்ளிப்கார்ட் தளத்தில் கேலக்ஸி எப்02எஸ் மற்றும் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்கள் பிரத்யேக வலைப்பக்கத்தில் விவரிக்கப்பட்டு உள்ளன.