நாசாவின் சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு!
Posted on 20/04/2021
1976ம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. குறிப்பாக புதிய தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கி பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது நாசா அமைப்பு. அதன்படி தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கப்பட்ட நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது, செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்படித்து அனுப்பி வருகிறது.