வருகிறது ஜியோவின் 5G சேவை
Posted on 09/12/2020
இன்று நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 நிகழ்வின் போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆன முகேஷ் அம்பானி, வருகிற ஜூன் 2021-க்குள் இந்தியாவில் ஜியோவின் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறினார். ஜியோ வழங்கும் 5 ஜி சேவை அரசாங்கத்தின் ஆத்மனிர்பர் பாரத் கொள்கைக்கு சான்றாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் முகேஷ் அம்பானி கூறுகையில், "இந்தியா இன்று, டிஜிட்டல் மையத்தால் இணைக்கப்பட்ட சிறந்த உலக நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த வழியைத் தக்க வைத்துக் கொள்ள, 5G இன் ஆரம்ப வெளியீட்டை விரைவுபடுத்துவதற்குமான, அதை மலிவு விலையில் கிடைப்பதற்குமான, அதே சமயம் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வதற்குமான கொள்கை நடவடிக்கைகள் தேவை.
அதில் ஜியோ நிறுவனம் ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் 5ஜி புரட்சி உண்டாகும். இது உள்நாட்டிலேயே உருவாக்கம் பெற்ற நெட்வொர்க், வன்பொருள் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.