செல்வராகவனின் பகாசசூரன் படப்பிடிப்பு தொடக்கம்

செல்வராகவனின் பகாசசூரன் படப்பிடிப்பு தொடக்கம்

'பீஸ்ட்' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'பகாசூரன்'. இதில் இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் நடிக்கிறார். ஃபாரூக் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் இயக்குநர் மோகன் ஜி இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் உலகில் உயரமான முருகன் சிலை அமைந்திருக்கும் சேலம் முத்துமலை முருகன் ஆலயத்தில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது.
 
'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' என சாதிய அடையாளத்துடன் படைப்புகளை உருவாக்கி, வணிகரீதியாக வெற்றியைக் கண்ட இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' தயாராகி வருவதால், படத்திற்கு குறிப்பிட்ட சமுதாய மக்களிடம் மட்டுமல்லாமல் திரை ஆர்வலர்களிடத்திலும் பெரும் வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.
 

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top