மன்னிப்பு கேட்டபின்பும் காயப்படுத்தலாமா? - விஷால்
Posted on 30/09/2017
'விழித்திரு' படத்தின் பத்திரிகையளார் சந்திப்பு நடைபெற்ற போது, நடிகை தன்ஷிகா, மேடையில் அமர்ந்திருந்த டி. ராஜேந்தர் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டார். பேசும் போது அவர் பெயர் விடுபட்டதை உணர்ந்த தன்ஷிகா டி. ராஜேந்தர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட போதும், தன்ஷிகாவை அவமானப்படுத்தும் விதத்தில் டி. ராஜேந்தர் தொடர்ந்து ஆவேசமாகப் பேசினார்.
.ராஜேந்தரின் இந்த செயலுக்கு நடிகர் சங்கத் தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தும்படி பேசியது டி.ஆர் போன்ற ஒரு மூத்த கலைஞருக்கு அழகல்ல. மேலும், தன்னுடைய சக நடிகை அவமானப்படும் பொழுது அதை கண்டு கைதட்டி ரசித்த நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் விதாரத்திற்கும் கண்டனம் தெரிவிப்பதாகவும் விஷால் கூறியுள்ளார்.
Tags: News, Hero, Star