விஷால் டி மாலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மௌன அஞ்சலி!
Posted on 10/12/2016
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவையொட்டி பல்வேறு இடங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன ஊர்வலம், மொட்டை அடித்தல் போன்றவை நடைபெற்று வருகின்றது. கடந்த 6-ம் தேதி செல்வி ஜெயலலிதா அவர்களின் உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை அவருக்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள விஷால் டி மாலில் கடந்த 7-ம் தேதி மாண்புமிகு முதல்வர் டாக்டர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், விஷால் டி மால் ஊழியர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்குபெற்று தங்கள் அஞ்சலியை ஜெயலலிதா அம்மாவிற்கு செலுத்தினர்.
Tags: News, Madurai News