டெஸ்ட் போட்டியில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்!

டெஸ்ட் போட்டியில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான்!

தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், 95 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 272 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் ஆஸம் 77, பவாத் ஆலம் 45, பாகீம் அஷ்ரப் 78* ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் நோர்ட்ஜ் 5, மகராஜ் 3, முல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் இன்னிங்சில் 201 ரன்னுக்கு சுருண்டது. பவுமா 44*, கேப்டன் டி காக் 29, முல்டர் 33, லிண்டே 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பாக். பந்துவீச்சில் ஹசன் அலி 5, அப்ரிடி, அஷ்ரப், நவுமன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top