இப்ப தோனியோட பெரிய ஆசை என்ன தெரியுமா?

இப்ப தோனியோட பெரிய ஆசை என்ன தெரியுமா?

இப்போது தோனியின் பெரிய ஆசை என்ன என்பது பற்றி அவர் நண்பர் ஒரு தகவலை கூறி உள்ளார். 
 
தோனி கிட்டத்தட்ட தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார். 
 
இந்த நிலையில் தோனி தற்போது தன் கிரிக்கெட் பயணத்தின் மிகப் பெரிய ஆசையாக இதைத்தான் வைத்துள்ளார் என அவரது நண்பரும், விளம்பர நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸ்-இன் இயக்குனருமான அருண் பாண்டே ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.
 
அருண் பாண்டே கூறியது இது தான். "ஒருநாள் போட்டிகளில் தன் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது இருந்து தோனியின் ஒரே கனவு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடுவது தான். அதில் அணியின் ஆலோசகராகவும் இருப்பார் தோனி" என கூறி உள்ளார்.
 
மேலும், "அவர் கோலிக்கு நேரம் கொடுத்து கேப்டன் பதவியில் வளர இடம் அளித்தார். அவரது எண்ணத்தில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை" என கூறினார் பாண்டே. தோனி தான் கேப்டன் பதவியை கோலிக்கு விட்டுக் கொடுத்தார் என்பது போல கூறியுள்ளார் அருண் பாண்டே.
 
தோனி சில காலமாக ஒருநாள் போட்டிகளில் ரன் குவிப்பதில்லை. எனினும், விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்குகிறார். 2020 டி20 உலகக்கோப்பை வரை தோனி அணியில் நீடிக்க மாட்டார் என்பதை அடுத்து அவர் இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
இந்த சூழ்நிலையில், ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக வளர்ந்து வருகிறார். டெஸ்ட் அணியில் ஏற்கனவே விக்கெட் கீப்பர் இடத்தை ஓரளவு தக்க வைத்து விட்டார். அடுத்து டி20 மற்றும் ஒருநாள் அணியிலும் பேட்ஸ்மேனாக ஆடி வருகிறார். இது தோனிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், தோனி 2019 உலகக்கோப்பை வரை ஆடுவார் என பிசிசிஐ வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

Tags: News, Sports, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top