கணேஷ், ரைசாவை கொலை செய்த ஆரவ்! அடுத்தது யார்?

கணேஷ், ரைசாவை கொலை செய்த ஆரவ்! அடுத்தது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் அந்த கொலையாளி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் பரபரப்பாக செல்கிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது யார் அந்த கொலையாளி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், வையாபுரி மற்றும் காஜல் இருவரும் கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரிகள். இவர்கள் தான் போலீஸ் என்று மற்றவர்களுக்கும் தெரியும். ஆனால், ஆரவ் மற்றும் ஹரீஷ் தான் கொலையாளி என்பது யாருக்கும் தெரியாது. இவர்கள் முதலில் கணேஷிற்கு முட்டையை ஊட்டிவிட்டு அவரை கொலை செய்தனர்.

அதன் பிறகு பிக்பாஸ், கணேஷ் நீங்கள் இறந்துவிட்டதாகவும் இனிமேல் வீட்டிற்குள் வரக்கூடாது என்றும் பிக்பாஸ் தெரிவித்தார். ஆனால், டாஸ்க் செய்யும்போது உள்ளே வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அனைவருக்கும் மல்யுத்த டாஸ்ட் கொடுக்கப்பட்டது. இதில், முதலில் அவரவர் ஒருவரையொருவர் சோதித்து பார்த்துக் கொண்டனர். அதன் பிறகு உண்மையில் மல்யுத்த போட்டி நடத்தப்பட்டு, இதற்கு ஒரு பயிற்சியாளரும், இரண்டு மல்யுத்த போட்டியாள்ர்களும் உள்ளே வந்தனர். அந்த போட்டியாளர்களுடன் அதிக நேரம் யார் போராடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். இதில், கணேஷ் மற்றும் சுஜா இருவரும் வெற்றி பெற்று, பரிசாக முட்டையும் வாங்கினர்.

இதையடுத்து கொலையாளிகள் அடுத்த கொலையை செய்து முடித்தனர். இதில், ரைசாவை 3 முறை அட போங்கப்பா என்று சொல்ல வைக்கணும். அதன்படி ரைசாவும் சொல்ல, அவரும் தற்போது ஆவியானதாக பிக்பாஸ் தெரிவித்தார். இந்த நிலையில், இவர்களின் அடுத்த டார்கெட் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இதற்கிடையில் வையாபுரியும், காஜலும் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top