சுங்கச்சாவடிகளில தொடங்கியது கட்டணம் வசூல்

சுங்கச்சாவடிகளில தொடங்கியது கட்டணம் வசூல்

டில்லி: இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டண வசூல் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கி உள்ளது.
பிரதமர் மோடி கறுப்பு பணததை ஒழிப்பதற்காக கடந்த 8ந் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அன்று முதல் இன்று வரை அனைத்து மக்களிடம் பெரும் சில்லறை தட்டுபாடு நிலவி வருகிறது.
இதனால் சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2 ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய அமைச்சர் அறிவித்திருந்தார். நேற்றுடன் அந்த அறிவிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்கக் கட்டணத்திற்காக வாகன ஓட்டிகள் அனைவரும் 2000 ரூபாய் நோட்டுகளையே நீட்டுவதால் போதிய சில்லரை தர முடியாமல் சுங்கச்சாவடி ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 3800 சுங்fகச்சாவடிகளிலும் ஸ்வைப் மெஷின் ரெடியாக வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இன்னும் ஸ்வைப் செய்யும் வசதி செயல்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலிப்பு மீண்டும் துவங்கியுள்ளதால் லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்படும் என லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
ஆகையால் சுங்கக் கட்டண வசூலை நீடிக்க வேண்டும் என அவர்களும் கேரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் இம்மாத இறுதி வரை காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top