வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொங்கல் விழா!
Posted on 16/01/2017
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 13-1-2017 அன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர், M.V. முத்துராமலிங்கம் அவர்கள் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக பெண்களுக்கான கோலப் போட்டி, லெமன் இன் ஸ்பூன் போட்டி, ஆண்களுக்கான சாக்கு மற்றும் உறியடிப் போட்டி, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி, மருத்துவர்களுக்கான இசை நாற்காலிப் போட்டி முதலியவை நடைப்பெற்றது.
இதுமட்டுமல்லாது நம் கலாச்சாரத்தை நினைவூட்டும் வண்ணம் தப்பாட்டம், கரகாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், கட்டைக்காலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நய்யான்டி மேளம், ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் Dr. ராஜமுத்தையா, மருத்துவ கண்கானிப்பாளர் Dr. சோமசுந்தரம், மருத்துவ சேவைகள் இயக்குநர் Dr.செல்வக்குமார், பிற மருத்துவர்கள், மாணவர்கள், ஊழியர்கள், அவர்களது குடும்பத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் மட்டு;மல்லாது மதுரைக்கு சுற்றுலா வந்த ஆஸ்திலேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திற்கும் மேற்ப்பட்ட வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டதோடு மகிழ்ச்சியில் அவர்களும் நடனம் ஆடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சிகான ஏற்ப்பாடுகளை திருமதி உமா, மக்கள் தொடர்பு அலுவலர், திரு. வினோத் கண்ணன், திரு. விஜய குமார் ஆகிய துறைத் தலைவர்கள் செய்தனர்.
Tags: News, Lifestyle, Art and Culture