அரியானா முதல்வர் தேநீர் கட்டணத்தை மொபைலில் செலுத்தினார்.

அரியானா முதல்வர்  தேநீர் கட்டணத்தை மொபைலில் செலுத்தினார்.

மொபைல் போனில் அல்லது ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்பவர்களூக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து மக்கள் ஸ்வைப் மெஷினை தேட  தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்வைப் பரிவார்த்தனையை ஊக்குவிக்கும் வகையில  ஹரியானா மாநில முதல்வர் அருந்திய டீ க்கு மொபைல் மூலம் அவரே கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

முதல்வர் மனோகர் லால் கட்டார் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் கர்னால் அருகேயுள்ள  பேருந்து நிலையத்தில் செயல்படும்  டீ கடைக்கு சென்று டீ அருந்தினார். பின்னர் அந்த கட்டணத்தை தனது மொபைலில் உள்ள இ-சேவை மூலமாக தேநீர் கடைக்காரரின் அக்கவுண்ட்டுக்கு பரிமாற்றம் செய்தார்.

அதுமட்டுமின்றி பணமில்லா பரிவர்த்தனை குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுமாறு அந்த டீ கடைக்காரரையும் முதல்வர் கேட்டுக்கொண்டார். பணமில்லா பரிவர்த்தனையை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  ஹரியனா முதல்வர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top